இயற்கை வழிபாடு
வெட்டினாலும் நிழலை தரும் மரமே,
குத்தினாலும் நீரை செறியும் மண்ணே,
பாரபட்சமில்லாமல் தாகம் தணிக்கும் நீரே,
தட்சணை வாங்காமல் உயிர் வாழ வைக்கும் காற்றே,
மொழியின் தேவையின்றி மனிதர்களோடு உரையாடும் வானே,
வேண்டுதல் ஏதுமின்றி தேவையை தீர்க்கும் இயற்கையே நம் வழிபாடு ❤️
நன்றி : ஷாலின் மரிய லாரன்ஸ்.